Thursday, December 30, 2010

இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?

http://hindia.in/tamilnews/wp-content/uploads/2010/12/State-Electricity-Board.jpg 
திருப்பூர்: இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத் தும் முறை குறித்து, மின் வாரியம் தெளிவுபடுத்தி உள்ளது.
திருப்பூர் மின்பகிர் மான வட்ட மேற் பார்வை செயற்பொறி யாளர் நிர்மலதா வெளி யிட்டுள்ள அறிக்கை: மின் கட்டணங்களை இணைய தளம் வழியாக செலுத்தும் மின் நுகர் வோர், இணைய தளம் மூலம் www.tneb.in என்ற இணைய தளத்தில் நுழையவும்; அதில் காணப்படும் "பில்லிங் சர்வீசஸ்' என்ற தலைப் புக்குள் "ஆன்லைன் பில் பேமன்ட்' என்ற துணை தலைப்பை "கிளிக்' செய்து மின் கட்டண நுழைவாயில் "இன்டர் நெட் பேமன்ட் கேட்வே' என்ற படிவத்தில் கேட்கப் பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, மின் கட் டணத்தை செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் ஏ.டி.எம்., அட்டைகள் மூல மாகவோ, அனைத்து மாஸ்டர்/விசா கடன் அட்டைகள் மூலமாகவோ இணைய தளத்தில் பணம் செலுத்தலாம். இணைய தள வணிக சேவை மூலம் மின் கட் டணம் செலுத்தும் வசதி ஆக்சிஸ் பாங்க், ஐ.சி.ஐ. சி.ஐ., சிட்டி யூனியன் பாங்க், ஐ.ஓ.பி., - ஐ.பி., ஆகிய வங்கிகளில் உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

Monday, December 27, 2010

கடும் பனியிலும் விமானம் தரையிறக்கலாம் : கை கொடுக்கிறது "3 பி' தொழில் நுட்பம்

http://img.dinamalar.com/data/large/large_154205.jpg 
கோவை : "கடும் பனிப்பொழிவு காலங்களிலும், "3பி' தொழில் நுட்பத்தில் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்கலாம்; பயணிகள் அஞ்சத் தேவையில்லை' என, கோவை விமான போக்குவரத்து மேலாண்மை அதிகாரி தெரிவித்தார்.

டில்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பார்வை தூர வரையறையை விமான போக்குவரத்துத்துறை தளர்த்தி, நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. குறைந்தபட்சமாக 50 மீ., வரை தெளிவான பார்வைப் புலன் இருந்தால் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். தரையிறக்குவதில் கையாளப்படும் மூவகை தொழில் நுட்பத்தில் "3பி' முறையில் விமானத்தை தரையிறக்க முடியும். இத்தகைய தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, விமானிகளின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே மோசமான வானிலை நிலவும் போது விமான சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே "3பி' தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற விமானிகள் உள்ளனர்.

கோவை விமான போக்குவரத்து மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.எல்.எஸ்., (இன்ஸ்ட்ருமென்ட் லேண்டிங் சிஸ்டம்) எனப்படும் விமானம் தரையிறங்கும் முறையில் பார்வை தூர வரையறை ( விசிபிலிட்டி லிமிட் ) மூன்று பிரிவுகளாக உள்ளது. இதில், முதல் பிரிவு 800 மீ., மேல், இரண்டாம் பிரிவு 500 மீ., மேல் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவில் ஏ.பி.சி., என, மூன்று உட்பிரிவுகள் உள்ளன. இதில் "3பி' உட்பிரிவில் 50 மீ., வரை தெளிவான பார்வை இருந்தாலே விமானங்களை தரையிறக்க முடியும். தேர்ந்த விமானிகளால் மட்டுமே இம்முறையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே இத்தகைய பிரத்யேக பயிற்சி பெற்ற விமானிகள் பணியில் உள்ளனர். இதன் காரணமாகவே, கடும் பனிப்பொழிவு நிலவும் போதும். ஒரு சில நிறுவனங்களின் விமான சேவை ரத்து செய்யப்படுவதில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் குளிர் காலத்தில் "ஜீரோ விசிபிலிட்டி' பார்வை தூரத்திலும் விமானத்தை தரையிறக்கும் தொழில் நுட்பம் உள்ளது. இந்தியாவில் அதற்கான தேவை இல்லாததால் அத்தகைய தொழில் நுட்பம் பின்பற்றப்படுவதில்லை. எதிர் காலத்தில் தேவை ஏற்பட்டால் "ஜீரோ விசிபிலிட்டி' நேரத்திலும் விமானத்தை தரையிறக்கும் தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பார்வை தூர வரையறை குறைக்கப்படுவதால், விமான பாதுகாப்பு குறித்து பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

ஆசிரியர்கள் தொடர் மறியல்

http://img.dinamalar.com/data/uploads/WR_605096.jpeg

Friday, December 24, 2010

உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

கோவை: கோவை மாநகர போலீஸ் ஐ.எஸ்., உதவிக்கமிஷனராக ராஜாராம் நேற்று பொறுப்பேற்றார். மாநகர போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு (ஐ.எஸ்.,) கூடுதல் துணைக்கமிஷனராக பணியாற்றிய நந்தகுமார், கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். மாற்று அதிகாரியை நியமிக்க கால அவகாசம் தேவைப் பட்டதால், நுண்ணறிவுப் பிரிவு உதவிக்கமிஷனர் பொறுப்பு, மாநகர போலீஸ் கிழக்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் சுரேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் சப்-டிவிஷனில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ராஜாராம் அங்கிருந்து மாற்றப்பட்டு, மாநகர போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமிஷனராக நியமிக்கப்பட்டார். எனினும், இவர் உதவிக்கமிஷனராக பொறுப் பேற்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமினராக ராஜாராம் நேற்று காலையேபொறுப்பேற்றுக்கொண்டார். இவர், இதற்குமுன் மாநகர நுண்ணறிவுப்பிரிவிலும், கோவை மாவட்ட போலீசின் "ஸ்பெஷல் பிராஞ்ச்' பிரிவிலும் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.

திருப்பூர் மாவட்டத்தில் 25 பள்ளிகளில் முதலுதவி சிகிச்சை பயிற்சி: கலெக்டர்

மடத்துக்குளம்: ""முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி பேசினார். மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு உயர்நிலைப்பள்ளியில் நேற்று புதிய வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நபார்டு திட்டத்தில் 20 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட நூலகர் அலுவலகம் தொடக்கவிழா நடந்தது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். திருப்பூர் கலெக்டர் சமயமூர்த்தி பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 167 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, பள்ளிகள் உள்ளிட்ட 1,817 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் மூன்று லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை கல்வி வசதி, சைக்கிள், கணினிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.மாணவர்களின் கல்வித்தரம் உயர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விலங்குகள் மற்றும் தாவரங்கள் மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் பசுமைபடை அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் பள்ளி மாணவர்கள் வனத்தை முழுமையாக புரிந்து கொள்ள மாதத்தில் இரண்டு நாட்கள் வனப்பகுதிகளுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் திட்டத்தில், நான்கு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளாகத்தில் மரம் வளர்ப்பிற்காக தலா 250 மரக்கன்றுகளும், 25 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்படும் போது உரிய முதலுதவி சிகிச்சைகள் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வை மாணவப்பருவத்தில் ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும்.முதலுதவி சிகிச்சையை மாணவர்களே மேற்கொள்ளும் வகையில், மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது',இவ்வாறு கலெக்டர் பேசினார். விழாவில், ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் ,ஒன்றியக்குழு உறுப்பினர் முபாரக்அலி, தலைமையாசிரியர் ஆண்டாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Wednesday, December 22, 2010

christmas cake

இறை தேடும் பறவைகள்

http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2010/12/23/photographs/159/23_12_2010_159_016_001.jpg

சிக்கியது சிறுத்தை

http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2010/12/23/Article//004/23_12_2010_004_014.jpg

கோயம்புத்தூர் மாவட்டம்

 வரலாறு | மாவட்ட நிர்வாகம் | மாவட்டம் ஒரு பார்வை | சுற்றுலா தளங்கள் | மக்கள் பிரதிநிதிகள் | நிர்வாக வரைபடம் | மின் ஆளுமை 
 புகைப்படங்கள் | புள்ளியல் கையேடு | தொலைபேசி எண்கள் | மின்னஞ்சல் முகவரிகள் | தொடர்புகள் |  முகப்பு | ஆங்கில இணையதளம்



கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம்,நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நுhற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள் , சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தற்பொழுதும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு மனதிற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் சிறந்து விழங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது. மேலும் இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. முதல் நெசவு நூற்ப்பாலை 1888 ல் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்ப்பாலைகள் இயங்கி வருகின்றது. இதன் விளைவாக நிலையான பொருளாதாரம் மற்றும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்ப்பாலை நகரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இங்கு 25000க்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நுhற்பாலைகள் உள்ளன. கோயம்புத்தூர் நீர் ஏற்றுக் குழாய் மற்றும் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகளின் சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930ல் பைகாரா நீர்மின் திட்டம் செயல்பட தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாநிலமான கேரளத்திற்க்கும் புகழ்மிகுந்த உதக மண்டலத்த்திற்க்கும் நுழைவு மற்றும் முடிவு வாயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மலை இரயில் இங்கிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்து போக்குவரத்துகள் உள்ளன.

மலைவளம் :

இம்மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கும் மழைக்கும் காரணமாக அமைவது இம்மாவட்டத்தைச்சுற்றியுள்ள மலைகளே ஆகும். இம்மாவட்டத்தின் தெற்கில் உள்ளது. ஆணைமலை, வடமேற்கில் குச்சும்மலை, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலை உள்ளது. மற்றும் குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு பொளாம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பாலமலை, போன்ற மலைகள் உள்ளன. இம்மலைகளின் உயரம் 4000 அடிமுதல் 5000 அடி வரை உள்ளது, கடல் மட்டத்திலிருந்து 6000 அடிமுதல் 8000 அடிவரை உள்ளது.

வனவளம் :

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடுகள் அடர்த்தியாகவும் சிறந்த உயர்ந்த மரங்களைக் கொண்டும் விளங்குகின்றன. இத்தகைய காடுகளை 8 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1951 - ஆண்டிலிருந்து தனியாக வனத்துறை அமைக்கப்பட்டு காடுகள் பராமரிக்கப்படுகிறது. இம்மாவட்ட காடுகளின் எல்லை நீலகிரி மலை சரிவையும், மேற்கில் போலம்பட்டி தடாகம் பள்ளதாக்கு பகுதிகளில் உள்ள காடுகளையும், கிழக்கில் ஆணைமலை காடுகளையும் கொண்டுள்ளது. இதில் தேக்கு மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பொள்ளாச்சி டாப்சிலிப் , ஆணைமலை , துணக்கடவு தொகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மரங்கள் 150 அடி உயரம் வரை வளர்கின்றன. மூங்கில் பெரும்பான்மையாக கோவை மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன.

கனிம வளம்:

இம்மாவட்டத்தில் குறிப்பிடதக்க கனிம வள இடங்கள் மிக, கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன.இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

வேளாண்மை :

கோவை மாவட்டம் தலைசிறந்த தொழில் மாவட்டமாக விளங்கிய போதிலும், வேளாண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களைப் போல சிறந்து விளங்குகிறது.மொத்த நிலபரப்பில் 65 சதவிகிதம் விவசாயம் சாகுபடி செய்யப்படுகின்றன.

நெல், சோளம், கம்பு, ராகி, திணை, சாமை வரகு, முதலியவை சாகுபடி செய்யப்படுகின்றன.பயிறு வகைகளில் துவரை உளுந்து, கொள்ளு, மொச்சை, கடலை வகைகளும் சாகுபடி ஆகின்றன.பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய் வாழை, மஞ்சள் போன்றவைகளும் பயிராகின்றன.பயிர் செய்யும் மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள்.

கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளங்கிறது.



கோவை மாவட்ட பொது தகவல்கள்

தலைநகர்: கோயமுத்தூர்
பரப்பு: 4696.39 ச.கி.மீ
மொத்த மக்கள்தொகை : 2916620
ஆண்: 1482228
பெண்: 1434392
எழுத்தறிவு: 2018527 (69%)
ஆண்: 1113577 (75%)
பெண்: 904950 (63.1%)
மக்கள் நெருக்கம் (ச.கி.மீ): 601
பிறப்பு விகிதம்: 15.1
இறப்பு விகிதம்: 3.6

தோற்றம் :

கிபி 1804 ம் ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தனி மாவட்டமாக உருவானது. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக பெரியார் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், கிழக்கில் சேலம் மாவட்டமும் அமைந்துள்ளது. 1979 - ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டம், பெரியார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியோரம் அமைந்துள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் :
மாநகராட்சி – கோயம்புத்தூர்

ஊராட்சி ஒன்றியங்கள் : 12
காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம்,சர்க்கார்சாமகுளம், தொண்டாமுத்தூர்,அன்னூர், சூலூர், சுல்தான்பேட்டை, ஆணைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு)

பேரூராட்சிகள் : 44

ஊராட்சிகள் : 229, நகராட்சிகள் : 6, மாநகராட்சி : 1

வருவாய் நிர்வாகம் கோட்டங்கள் : 2
பொள்ளாச்சி, கோவை.

வட்டங்கள் : 6
கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர்

சட்டசபை தொகுதிகள் :9
மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, பேரூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை

Monday, December 20, 2010

என்று தீரும் இந்த கொடுமை

http://img.dinamalar.com/data/uploads/WR_47925.jpeg

வசதி செய்தி தருவார்களா

http://img.dinamalar.com/data/uploads/WR_499710.jpeg

Saturday, December 18, 2010

சிவன்மலை கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெற முயற்சி

காங்கயம் : ""சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, விரைவில் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெறப்படும்,'' என அறங்காவலர் குழு தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது; அறங்காவலர் குழு தலைவர் ராஜ்குமார், பூஜையை துவக்கி வைத்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிவன்மலை கும்பாபிஷேகத்தையொட்டி, ராஜகோபுரம், மண்டபம், குளியலறை, கழிவறை, யாகசாலை மண்டபம் கட்டுதல், குடிநீர் குழாய் இணைப்பு, வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தல், ஸ்டோர் ரூம் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் ரூ.80 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.ரூ.41.30 லட்சம் மதிப்பில், மலை மீது கோவில் முன்புள்ள காலியிடத்தில் கான்கிரீட் தளம் அமைத் தல், கர்ப்பகிரகத்துக்கு வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் மண்டபங்கள் கட்டும் வேலைகள் நடக்கின்றன. அலுவலக கட்டடத்துக்கு மேல் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை இன்று (நேற்று) நடந்தது; மதிப்பு ரூ.70 லட்சம்.

மேலும், குளியலறை, கழிவறை கட்டுதல், உள்பிரகாரத்தில் "கியூ லைன்' அமைத்தல், மலையடிவாரத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கொட்டகை மற்றும் "கியூ லைன்' அமைத்தல், கருணை இல்லம் கட்ட ரூ.70 லட்சம் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டு, கட்டப்பட உள்ளது.அர்த்த மண்டபத்தில் உள்ள கதவுப்படி மற்றும் பக்கச்சுவர்களுக்கு வெள்ளித்தகடு அமைக்கும் பணி நடக்க உள்ளது. மேலும், விசேஷ நாட்களில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு வரும் வாகனங்கள், மீண்டும் அதே வழியில் திரும்பிச் செல்வதால், வாகனப்

பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ரூ.1.8 கோடி மதிப்பில், ரோடு அகலப்படுத்தும் பணியும், மலை மீது இருந்து வேறு வழியில் சென்று, கொண்டை ஊசி வளைவு வரை 400 மீட்டருக்கு புதிய ரோடு அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், வாகனப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.மலைப்பாதையில் இணைப்புச்சாலை அமைத்தல், நூலகம் கட்டுதல், மின்சார பணிக்காக ரூ.76.46 லட்சம் மதிப்பீடு செய்து அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்களுக்கு மின்விளக்கு பொருத்தவும், அடிவாரத்தில் இருந்து மலை மீது வரை வாகனப்பாதையில் 1.8 கி.மீட்டருக்கு சூரிய ஒளி மின்சக்தி மின்விளக்குகள் அமைக்க தொழில்நுட்ப ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று விரைவில் பெறப்படும், என்றார்.அறங்காவலர்கள் வேலுச்சாமி, பழனிசாமி, பொன்னி, மாரன் மற்றும் செயல் அலுவலர் நடராஜன் உடனிருந்தனர்.

அடுத்த மாத இறுதிக்குள் 3,000 புதிய பஸ்கள் இயக்கம்: அமைச்சர் நேரு தகவல்

 

திருப்பூர் : ""போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடையும்படியான சம்பள உயர்வு அறிவிக்கப்படும்,'' என, போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். திருப்பூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் திறப்பு, புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம், விபத்தின்றி பணிபுரிந்த டிரைவர்களுக்கு பரிசளிக்கும் விழா, திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள பணிமனை வளாகத்தில் நேற்று நடந்தது. கோவை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பால்ராஜ் வரவேற்றார். நெடுஞ்சாலை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் நேரு பேசியதாவது: இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில், தமிழகத்தில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன; கட்டணங்களை உயர்த்தாத பட்சத்தில், சலுகை வழங்க இயலாது.  கடந்தாண்டில், 12 சதவீத உயர்வு என்பதே 200 கோடி ரூபாய் செலவாக இருந்தது; தற்போதைய நிலவரப்படி 420 கோடி இருந்தால்தான் செலவை ஈடுகட்ட முடியும். 240 மணி நேர வேலை என்ற அடிப்படையில், 2,000 பேர் புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்; பணி நேரம், 25 ஆண்டுகளில் மூன்று முறை பதவி உயர்வில், கடைசி பத்தாண்டுகளில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என கோரப்பட்டுள் ளது. கோரிக்கைகள் குறித்த அனைத்தும் பேச்சளவில் உள்ளது; வரும் 20ம் தேதி முதல்வர் முன்னிலையில் இறுதி முடிவெடுத்து அறிவிக்கப்படும். இந்த ஒப்பந்தம் மூலம், மற்ற துறைகளை விட அதிக சம்பளம் பெறும் வாய்ப்பு வருங்காலத்தில் உள்ளது. முன்பு 16 ஆயிரம் பஸ்களுடன், ஏழு போக்குவரத்து கழகங்கள் இருந்தன; தற்போது 20 ஆயிரம் பஸ்கள், ஒன்பது போக்குவரத்து கழகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து, டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் அலுவலர்கள் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் 20 ஆயிரம் பஸ்களில், 15 ஆயிரம் புதிய பஸ்களாக ஓடுகின்றன; ஜன., மாத இறுதிக்குள், மேலும் 3,000 பஸ்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. 45 ஆயிரம் பேர், புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,200 தொழில்நுட்ப பணியாளர்கள் அமர்த்தப்பட உள்ளனர். வரும் 20ம் தேதி அறிவிக்க உள்ள ஒப்பந்தத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மகிழும்படியான சம்பள உயர்வு இருக்கும்.இவ்வாறு, நேரு பேசினார்.

கலெக்டர் சமயமூர்த்தி, மேயர் செல்வராஜ், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் மண்டல பொதுமேலாளர் செல்வராஜ் நன்றி கூறினார். பரிசளிப்பு: 25 ஆண்டுகள் விபத்தின்றி பஸ்சை இயக்கிய டிரைவர்கள் எட்டு பேருக்கு தங்க பதக்கம், தலா 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி ஓட்டிய 101 டிரைவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய்; 15 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி ஓட்டிய 149 டிரைவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் என 258 பேருக்கு, 14.90 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

Friday, December 17, 2010

கோவை மண்டலத்தில் உள்ள முக்கிய புகைப்படம்



















































Thursday, December 16, 2010

கோவை நகரில் 15 பள்ளிகள் தத்தெடுப்பு : கல்விச் சேவையில் போலீஸ்

http://img.dinamalar.com/data/large/large_146654.jpgகோவை : கோவை மாநகரிலுள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் 15 பள்ளிகளை தத்தெடுத்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, செல்வபுரம், தெலுங்குபாளையத்திலுள்ள ஸ்ரீ வைதீஸ்வரா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்துள்ள மாநகர போலீசார், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்தின் துவக்க விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்கான கம்ப்யூட்டர் சாதனங்களையும், சத்துணவு மையத்துக்கு தேவையான சமையல் பாத்திரங்களையும் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று வழங்கினார். இவ்விழாவில், ஸ்ரீ வைதீஸ்வரா வித்யாலயம் நடுநிலைப் பள்ளியின் தாளாளர் அர்ஜுனன், மாவட்ட துவக்க கல்வி அலுவலர் அய்யண்ணன், பென்ஸ் கிளப் தலைவர் சக்தி, "ராக்' அமைப்பின் துணைத்தலைவர் ரவிசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளி தத்தெடுப்பு திட்டம் குறித்து, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு அளித்த பேட்டி: கோவை நகரில் மொத்தம் 15 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஸ்டேஷன் தோறும் தலா ஒரு அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியை தேர்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி உக்கடம், கோட்டைமேட்டிலுள்ள மன்ப உல் உலூம் பள்ளி, செல்வபுரம் பகுதியிலுள்ள வைதீஸ் வரா பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன; கழிவறை கட்டும் பணியும் துவக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மற்ற பகுதிகளிலும் அடிப்படை வசதிக ளற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை தேர்வு செய்து, உதவி வழங்குவதற் கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை "லீட் இந்தியா 2020' என்ற தன்னார்வ அமைப்பு வழங்குகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாக அவர்களது கல்வித்திறன், சிந்தனைத்திறனை மேம்படுத்த முடியும்.

அதே நேரத்தில், போலீஸ் பணி குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் துறையின் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை யுக்திகளை பள்ளி மாணவ, மாணவியர் நேரில் கண்டு விழிப்புணர்வு பெறும் வகையில், "போலீஸ் கமிஷனருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் துவக்கப்பட்டது. பள்ளி தோறும் 60 மாணவ, மாணவியரை அழைத்து போலீசாரின் நடவடிக்கை குறித்து நேரடியான செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆயுதப்படை பிரிவு, துப்பறியும் மோப்ப நாய் பிரிவு, தடய அறிவியல் துறை, போக்குவரத்து பிரிவு, சட்டம்- ஒழுங்கு, குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் பணிகளை மாணவ, மாணவியர் நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர். இதன் மூலமாக, போலீஸ் - மாணவ, மாணவியரிடையே நெருக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளோம். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களின் பொழுது போக்குக்கான "பாய்ஸ் கிளப்'கள் சில ஆண்டுகளுக்கு முன் நகரில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த கிளப்களின் தரத்தை மேம்படுத்தி, போதிய வசதிகள் ஏற்படுத்தப்படும். போலீசார் வழக்கமான பணிகளில் ஈடுபடும் அதே நேரத்தில், சமுதாயத்துக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

இந்தியன் வங்கி உதவி: இந்தியன் வங்கி சார்பில், கோவை நகர் மற்றும் புறநகரிலுள்ள 9 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் சாதனங்கள் நேற்று வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்தது. சிங்காநல்லூர், காந்திமாநகர், கணுவாய், தீத்திபாளையம், காட்டம்பட்டி, பரளி பவர் ஹவுஸ், பெரியபுத்தூர், சரவணம்பட்டி, குமிட்டிபதி பகுதிகளிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான 36 கம்ப்யூட்டர்களை ஐ.ஜி., சிவனாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் பூதலிங்கம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி மற்றும் அரசு உயர்நிலைபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றன

Wednesday, December 15, 2010

Pollachi Aaliyar Dam

Aaliyar Dam
Aliyar Dam is a reservoir located 27 KM away from pollachi on the foothills of Valparai, in the Anamalai range of the Western Ghats.


The dam offers some ideal getaways including a park, an aquarium and a mini Theme-Park maintained by Tamilnadu Fisheries Corporation. It is an ideal picnic spot. Overnight stay is possible in the forest rest house. If you are taking public transport, take Town bus (route number 37A and 37B) or take a bus to Navamalai or Vaalpaarai and get down at Aaliyar Dam. Drinks and snacks are slightly expensive than the MRP here. The park entry fee is INR 10.
Aliyar Photo Gallery


Related Posts Plugin for WordPress, Blogger...